புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2015

அரசின் தீர்வுத் திட்டம் சிறுபான்மையினரின் தேவைகளை நிறைவேற்றுவதாக அமைய வேண்டும்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசியல் சீர்திருத்தத்துடனான தீர்வுத்திட்டமானது சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையவேண்டுமென தேசிய மீனவப் பேரவையின் தேசிய அமைப்பாளர் டபிள்யூ.ஏ.ஹேமன்குமார தெரிவித்தார். 

இதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது சமூகம் சார்ந்த நலன்களையும் தீர்;வுத்திட்ட ஆலோசனைகளையும் அரசாங்கத்திடம் முன்வைக்கவேண்டியது கடமையாகும். இதற்கான அழுத்தங்களையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தும் வகையில் சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பயன்மிக்க கருத்தாடல்களையும் வழிநடத்தல்களையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார். 

அம்பாறை மாவட்ட மீனவப்பேரவையின் அனுசரணையுடன் வளர்பிறை பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச்சங்க கூட்ட மண்டபத்தில் திங்கட்கிழமை (09) மாலை நடைபெற்ற  ஒன்றுகூடலிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு மேலும் தெரிவித்ததாவது, 
'அதிகாரப்பரவலாக்களின் பொருட்டே 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தினூடாக இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், அந்த அதிகாரங்கள் பூரணமாக வழங்கப்படவில்லை. முக்கியமாக காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையிலேயே இன்னும் இருந்துவருகின்றன' என்றார். 

'தற்போதைய அரசாங்கமும் சர்வதேசமும் இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அதிக கவனம் செலுத்திவருகின்ற நிலைமை சிறுபான்மைச் சமூகங்களுக்கு பிரச்சினைகள் உண்டென்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைகின்றது. 

எனவே, இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு தற்போதுள்ள தேசிய அரசாங்கத்தை நல்லதொரு வாய்ப்பாக அனைவரும் பயன்படுத்த வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸடீன், கள உத்தியோகத்தர் கே.கோகுலன், வளர்பிறை பிரஜைகள் அமை;பின் தலைவர் ஏ.ஆர்.பமில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ad

ad