தேசியமட்ட இளையோருக்கான பளுதூக்கலில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
கொழும்பு பெனடிற் மகாவித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் பளுதூக்கல் போட்டியில் 17 வயதுப் பிரிவுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மாணவன் புஷானந்தன் 105 கிலோ எடை பிரிவுக்கு மேற்பட்ட பிரிவில் 180 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்