புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை பிரி மர்ர்க்கொல்கிளெவ் தான் நேரில் பார்த்தவற்றை கார்டியனில் பகிர்ந்து கொண்டுள்ளா

கறுப்பு உடையணிந்த ஓருவர் மிகவும்நேர்த்தியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற் கொள்வதை கண்டேன்”
பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் இருந்த பிரிட்டனை
சேர்ந்த உளவியல் மருத்துவர் மர்ர்க்கொல்கிளெவ் தான் நேரில் பார்த்தவற்றை கார்டியனில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
 
நாங்கள் அந்த உணவகத்திலிருந்து 20 மீற்றர் தொலைவில் நின்றிருந்த வேளை முதலாவது பட்டாசுசத்தத்தை கேட்டோம்,நாங்கள் திரும்பிப்பார்த்த வேளை 185சென்டிமீற்றர் உயரமுள்ள நபர்  ஓருவரை கண்டேன், அவர் நின்றிருந்த விதம், அவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்  என்பதை எனக்கு உணர்த்தியது.
 
அவர் துப்பாக்கிபிரயோகம் செய்பவர் காணப்படுவது போன்று காணப்பட்டார், வலது காலை முன்நோக்கி நகர்த்தி அவரது இடது காலில் பின்நோக்கி நின்று கொண்டிருந்தார், அவரது இடது தோளில் துப்பாக்கி காணப்பட்டது, என்னால் மகஜின்களையும் பார்க்கமுடிந்தது.
 
அவர் அணிந்திருந்த அனைத்தும இறுக்கமானவைகளாகவும், கறுப்பு நிறத்திலும் காணப்பட்டன.
 
மோதலில் ஈடுபட்டுள்ள படைவீரர் ஓருவர் எவ்வாறு தோற்றமளிப்பார் என நீங்கள் சிந்தித்தால் அதற்கு பொருந்தக்கூடிய விதத்தில் இவர் காணப்பட்டார்,அவர் தனது இடது கையால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட வண்ணமிருந்தார்,அவை தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் தொழிற்சார் தன்மைகொண்ட துப்பாக்கி பிரயோகங்களாக காணப்பட்டன.
 
எனக்கு முன்னாள் உள்ள உணவுவிடுதியில் கதிரையில் அமர்ந்திருந்த மூன்று அல்லது நான்கு நபர்களை அவர் தனது துப்பாக்கி பிரயோகத்தின் மூலம் கொன்றார்,அவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காவதையும் நிலத்தில் வீழ்ந்து பலியாவதையும் நான் கண்ணால் கண்டேன்.
 
அதன் பின்னர் அவர் தனது துப்பாக்கியை இடம்மாற்றி கார்சாராதியின் கதவின் ஊடாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்,அதன் பின்னர் அவர் அந்த உணவுவிடுதிக்குள் செல்வதை நான் பார்த்தேன், அவர் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார், அவ்வேளையே நாங்கள் பாதுகாப்பிற்காக ஓடதொடங்கினோம்.
 
எங்களால் 15 முதல் 20 வரையிலான துப்பாக்கிவேட்டுகளை கேட்கமுடிந்தது  அதன் பின்னர் அனைத்தும் தீடீர் என மௌனமாகியது.
 
துப்பாக்கி பிரயோகம் நின்றவுடன் நாங்கள் உள்ளே சென்றோம்,உணவுவிடுதியின் முன்பகுதியில் வைத்து சுடப்பட்டமூவரும் அங்கேயே வீழ்ந்து கிடந்தனர்,பின்னர் நாங்கள் தாக்குதலிற்கு இலக்கான வெள்ளை காரைநோக்கி சென்றோம்,பொதுமக்கள் அந்த காரின் சாரதியை காப்பாற்றி வெளியில் தூண் ஒன்றில் அமர்த்தியிருந்தனர்  அவர் மரணித்துக்கொண்டிருந்தார்.
 
நாங்கள் அந்த இடத்திலிருந்து புறப்படுவதற்கு தயாரான வேளை பொலிஸ்கார்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் வருவதை பார்த்தோம்,தப்பிவீடு சென்றுவிடுவோம் என மனது சொன்னாலும்,சமூக அக்கறை காரணமாக பொலிஸாருடன் மீண்டும் சம்பவ இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம்,
 
பொலிஸார் எங்களை துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்ற உணவுவிடுதிக்கு அழைத்துச்சென்றனர்,அது மிகவும் பயங்கரமானதாக காணப்பட்டது,நாங்கள் அங்கு 10 முதல் 15 பேரை பார்த்தோம் அவர்கள் ஓன்றில் மரணித்திருக்கவேண்டும் அல்லது படுகாயம் அடைந்திருக்கவேண்டும்.
 
மருத்துவ உதவியாளாகள் அங்கு வந்திருந்தனர் அவர்கள் காயம் அடைந்தவர்களிற்கு சிகிச்சையளித்த வண்ணமிருந்தனர்,நாங்கள் பல உடல்களை பார்த்தோம், வயிற்றில் சுடப்பட்ட நபர் ஓருவரை பார்த்தோம்,அந்த இடம் மிகவும் அச்சமூட்டுவதாக காணப்பட்டது, எங்கும் குருதிபெருக்கெடுத்திருந்தது, திரைப்படங்களில் நாங்கள் காணும் குருதிக்கும் நிஜ வாழ்க்கையில் பார்க்க கூடிய குருதிக்கும் இடையிலான வித்தியாசத்தை நான் உணர்ந்தேன், நிஜவாழ்க்கையில் அது சற்று கனதியானது.
 
 
நாங்கள் எவராவது வாகனத்தில் அல்லது மோட்டார்சைக்கிளில் தப்பிசெல்வதை  பார்த்தோமா என பொலிஸார் விசாரித்தனர்,நாங்கள் குறிப்பிட்ட துப்பாக்கிதாரி தப்பிப்பதற்கு இலகுவான வீதியிலேயே உயிரை பாதுகாப்பதற்காக மறைத்திருந்தோம்,நாங்கள் சில கார்களிற்கு நடுவில் மறைந்திருந்தோம் ஆனால் எவரும் தப்பிசெல்வதை காணவில்லை.
 
பொலிஸார் எங்களிடமிருந்து சாட்சியங்களை பெறுவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு எங்களை அழைத்துசென்றனர்,நாங்கள் பார்த்த அந்த துப்பாக்கிதாரி கைதுசெய்யப்படவில்லை.
 
நாங்கள் பார்த்த இடங்களில் எல்லாம் துப்பாக்கிபிரயோகத்தை தற்கொலை தாக்குதல்களை நேரில் பார்த்த பலர் இருந்தனர்,
 
சிலர் உடல்களின் கீழே சிக்கிக்கொண்டவர்கள்,உடல்களை அகற்றிவிட்டு ஊர்ந்துவெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்,உடல்களிற்கு மேலேயே வீழ்ந்து கிடந்த சிலரும் உள்ளனர்.
 
அனைவருக்கும் அந்த நிமிடங்கள் மிகவும் பயங்கரமானவையாகவே காணப்பட்டன.

ad

ad