புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2015

இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்

இலங்கையுடன் கடல்சார் உறவுகளை பேணுவது குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும்


இலங்கையுடன் கடல்சார் உறவுகளைப் பேணுவது மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்
திருகோணமலையில் இரகசிய சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் என்ற அமைப்பு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் இலங்கையுடன் கடல்சார் உறவுகள் கூட்டுறவு நடவடிக்கைகள் பேணுதல் குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் கடற்படை கூட்டுப் பயிற்சிகள், கூட்டு நடவடிக்கள் தொடர்பில் நாடுகள் மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.

ad

ad