இலங்கையுடன் கடல்சார் உறவுகளைப் பேணுவது மீளாய்வு செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் என்ற அமைப்பு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் இலங்கையுடன் கடல்சார் உறவுகள் கூட்டுறவு நடவடிக்கைகள் பேணுதல் குறித்து மீளாய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் கடற்படை கூட்டுப் பயிற்சிகள், கூட்டு நடவடிக்கள் தொடர்பில் நாடுகள் மீளாய்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.