முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கூட்டு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாபா அபேவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்றுச்சபை என்ற ஓர் நிறுவனம் உருவாக்கப்படவில்லை.
100 நாள் திட்டத்தை அமுல்படுத்த சிவில் அமைப்புக்கள் பலவும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓர் சபையை உருவாக்கியிருந்தது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.