புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2016

செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது ஏற்றுக்கொண்ட அரசாங்கம்

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய
பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என ஸ்ரீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
2099 ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு சில மாதங்களில் வெளியான செனல் 4 தொலைக்காட்சியின் காணொளி சோடிக்கப்பட்டவை என தெரிவித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த நிலையிலேயே முதன்முறையாக ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அந்தக் காணொளி உண்மையானது என்று உறுதிப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா இரராணுவத்தினர் அணியும் சீரூடையை ஒத்த சீருடை அணிந்திருந்த சிலரால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் சிலரை நிர்வாணமாக்கி அவர்களது கைகளை பின்னால் வைத்து கட்டிய நிலையில் சுட்டுப்படுகொலை செய்யும் காணொளியை ஜே.டி.எஸ் என்ற இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தது.
இந்தக் காணொளி ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் காணொளி உட்பட மேலும் பல போர் குற்ற ஆதாரங்கள் மற்றும் நேரடி சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு உலகிக் முன்னணி ஆவணப்படத் தயாரிப்பாளரான கெலம் மெக்ரே தயாரித்த மூன்று ஆவணப் படங்களையும் செல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
எனினும் இந்தக் காணொளிகள் சோடிக்கப்பட்டவை என்று தெரிவித்திருந்த அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆதாரங்களை தொடர்ச்சியாக நிராகரித்து வந்தது. அதேவேளை தற்போதைய அரசாங்கமும் நேற்று வரை இந்தக் காணொளி தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடாது தொடர்ந்தும் மௌனம் காத்து வந்தது.
இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே இராணுவத்தினர் இந்தப் படுகொலையை புரிந்துள்ளதாகவும் இந்த கொடூரங்களை விரும்பாத இராணுவத்திலிருந்த சிலரே காணொளியை வெளியில் அனுப்பியிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டுவரும் பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மங்கள சமரவீர எழுதியுள்ள பதில் கடிதத்திலேயே இந்த விடையங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சியில் இருக்கும் போது அரசியல் லாபத்திற்காகவே மஹிந்த ராஜபக்ச தன்னை மனித உரிமை பாதுகாவலராக அடையாளப் படுத்தி வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள மங்கள சமரவீர, ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் அவர் எந்தளவிற்கு சந்தர்ப்பவாதி என்பதும் தேச விரோதி என்பதும் தெளிவாகப் புலப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad