புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2018

மாதகலில் இளம் பெண் கொலை! - வீட்டில் கொள்ளை

மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அன்டன் உதயராஜா டிலக்ஸி (22) என்ற இந்தப் பெண் அண்மையில் திருமணமானவர். இன்று காலை, இவரது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார். வெளியே சென்றிருந்தவர்கள் வீடு வந்து பார்த்த போது, டிலக்ஸி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அன்டன் உதயராஜா டிலக்ஸி (22) என்ற இந்தப் பெண் அண்மையில் திருமணமானவர். இன்று காலை, இவரது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார். வெளியே சென்றிருந்தவர்கள் வீடு வந்து பார்த்த போது, டிலக்ஸி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

அதேசமயம், அவர்களது வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் கவனித்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. வீட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கில் வீடு புகுந்த மர்ம நபர்கள், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான டிலக்ஸியைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ad

ad