புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2018

பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி!

வேலூரில் பேருந்து கட்டன உயர்வை ரத்து செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

தமிழகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் அரசு பேருந்துகளின் கட்டணத்தை 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பள்ளி, கல்லாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் பேருந்து கட்டன உயர்வை ரத்து செய்யக்கோரி வேலூரில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்பை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, மாணவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் மாணவர்கள் மீது போலீசார் கடும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நியாமான கோரிக்கைக்காக, அமைதியாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ad

ad