புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 பிப்., 2018

கொழும்பில் 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடை!

கொழும்பின் சில இடங்களில், எதிர்வரும் சனிக்கிழமை(17.02.2018) காலை 9.00 மணியிலிருந்து மறுநாள் காலை 9.00 மணி வரையிலான 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கொழும்பில் 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடை!



அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையிலான நீர் விநியோகப் பிரதான குழாய் கட்டமைப்பில் திருத்தநடவடிக்கைகள் காரணமாகவே, மேற்படி நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. இதன்படி கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை இதன்காரணமாக கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களுக்கான குறைவான அழுத்தத்துடன் நீர்விநியோகம் காணப்படும் என்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad