புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2019

மைத்திரியின் செயற்பாட்டுக்கு த.தே.கூட்டமைப்பு வன்மையாக கண்டனம்

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வண. ஞானசார தேரரைமன்னித்து விடுவித்த சிறிலங்கா ஜனாதிபதியின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டனம் செய்கின்றது.

ஹோமாகம நீதவான்நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த குற்றத்திற்காக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான் அவர்கள்மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, வண ஞானசார தேரர் அவர்களுக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டவிசாரணையொன்றின் பின்பே ,இந்தத் தண்டனையும் தீர்ப்பும் நிறைவேறியது.

உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது. ,இந்நாட்டின் பௌத்தர் அல்லாத பிரஜைகள்; மீதான வன்முறையை தூண்டிவிடும் ,த்தேரரின் நடவடிக்கைகள் மீதுஒருபோதும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், ,இச்சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டதிற்குட்படுத்தப்பட்டு கையாளப்பட்டார்.

எல்லா பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு ,இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவாலானது ,இனவெறி மற்றும் மதவெறியை கட்டுப்படுத்தி வைப்பதாகும். அரசாங்கமானது ,இச்சவாலை கருத்திற்கொண்டு எந்த ,இனத்தவர் மதத்தவராய் இருப்பினும், எல்லா கடும்போக்காளர்களையும் கடுமையாக கையாள வேண்டும். எல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் ஒரேவிதமாக நடாத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் ,இந்நிலையில் பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென்போக்கானது நாட்டிற்கு தவறான செய்தியைஅறிவிப்பதாக உள்ளது.

சிறுபான்மை மக்களிற்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படகூடியது, ஆனால் பெரும்பான்மை மக்களிற்கு சொற்ப அசௌகரியம் அளிக்கும் செயல்களோ மிக கடுமையாக தண்டிக்கப்படும் என்பதாகும். ,இது பேரினவாதத்தினை இன்னுமொரு கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையாகும் . ஜனாதிபதியின் ,இந்நடவடிக்கையை கண்டனம் செய்து ,இவ் ஆபத்தான போக்கினை மாற்றுவதற்கு நேர்வழிசிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம்

ad

ad