புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2020

லண்டன் டயர் 5க்கு செல்லும் பெரும் அபாய நிலை- வைத்தியசாலைகள் நிரம்பி முட்டி விட்டது

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் பரவி வரும் ஸ்பெயின் நாட்டு உருமாறிய கொரோனாவால், லண்டனில் உள்ள பல வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது. இதனால் மேலதிக நோயாளர்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் வைத்தியசாலைகள் திண்டாடி வரும் நிலையில். லண்டனிலும் அதனை சுற்றியுள்ள நகரங்களிலும் டயர் 5 என்று அழைக்கப்படும் மேலும் கடுமையான லாக் டவுன் ஒன்றை அறிவிக்க அரசு திட்டம் தீட்டி வருகிறது.

அப்படி நடக்குமேயானால், அத்தியவசிய வேலைக்கு செல்லும் நபர்கள் மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். மேலும் எந்த ஒரு நபரும் அவசர தேவை இல்லாமல் வெளியே செல்ல முடியாது. இது போன்ற மிகக் கடுமையான லாக் டவுன் ஒன்றை நாடு எதிர்கொண்டுள்ளது. அப்படியான ஒரு கடும் லாக் டவுனை போட்டு. அதேசமயம் , தடுப்பூசிகளையும் போட்டால் தான் பிரித்தானியா ஒரு அளவேனும் மீண்டும் வரும்.

எனவே இனி வரும் வாரங்கள் மிக மிக கடுமையான வாரங்களாக இருக்க கூடும் தமிழர்களே. ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

ad

ad