நள்ளிரவு வரை பற்றியெரிந்த சபுகஸ்கந்த எரிபொருள் தாங்கி! [Thursday 2025-09-11 07:00] |
![]() சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது |
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் கொலன்னாவை தீயணைப்பு படைக்கு சொந்தமான 9 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மணிநேரம் போராடி நள்ளிரவு அளவிலேயே தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
-
11 செப்., 2025
www.pungudutivuswiss.com