புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2025

www.pungudutivuswiss.com
பிரசவத்தின் போது வலிப்பு - இரட்டைக்குழந்தைகளும் தாயாரும் மரணம்!
[Saturday 2025-09-27 08:00]


யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்த போது உயிரிழந்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சோமசுந்தரம் வீதி ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நிமலராஜ் சாருமதி (வயது 28) என்ற இளம் தாயாரே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மேற்படி கற்பவதியான தாய்க்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மூலம் இரு சிசுக்கள் பிரசவிக்கப்பட்ட போது ஒரு சிசு இறந்தும் மற்றைய சிசு சில மணி நேரத்திலும் இறந்துள்ளது.

மயக்கமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (26) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான காரணம் கண்டறிய உடற்கூற்று பாகங்கள் இரசாயண பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ad

ad