யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி
யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐதேகவும், ஈபிடிபியும் தலா ஒவ்வொரு வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ளன.
விகிதாசார முறையிலான, 18 உறுப்பினர்களின் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும், 7 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.
இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு
ஈபிடிபி – 06
த.தே.கூட்டமைப்பு – 01
த.தே.ம.முன்னணி – 01
கிளிநொச்சி மாவட்டம் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தல் முடிவுகள் (உத்தியோகபூர்வமற்றவை)
கரைச்சி பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 16 சுயேட்சை – 5
பூநகரி பிரதேச சபை
11 வட்டாரங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 06 சுயேட்சை – 02
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை நகரசபையின் மொத்த ஆசனங்கள் 15 ஆகும். இங்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்புக்கு இன்னும் ஒரு ஆசனமே தேவைப்படுகிறது. விகிதாசார முறையிலான உறுப்பினர்கள் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை, ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபை கூடமைப்பு தோல்வி ஸ்ரீ ல சு கட்சி 8 கூடடமைப்பு 6 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 4 கூடமைப்பு வென்ற இடங்கள் களுவான்கேணி சித்தாண்டி கிழக்கு வந்தாறுமுலை பண்குடவெளி கரடியனாறு புல்லுமலை
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை 1 ஆம் வட்டாரம் பெரியநீலாவாணை பிரதேசம்
பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – 1479
தமிழர் விடுதலை கூட்டணி- 1026
தேசிய காங்கிரஸ் – 76
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை 10 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு பிரதேசம்
பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு -1169
தமிழர் விடுதலை கூட்டணி- 660
தேசிய காங்கிரஸ் – 239
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியிட்டியுள்ளனர்.
அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில் வட்டாரங்கள் அடிப்படையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் அதன் பிரகாரம் அரசடி : சிவம்பாக்கியநாதன் சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன் கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ் கல்லடி : தியாகராசா சரவணபவான் ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன் இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் வேட்பாளர்கள் உள்ளட பொது மக்களது பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.