புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2023

ரணில் -பசில் அணிக்குள் கடும் மோதல் - தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

www.pungudutivuswiss.comர
பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

13 ஏப்., 2023

மன்னாரில் ஒரு இலட்சம் போதை மாத்திரைகள் சிக்கின

www.pungudutivuswiss.com

மன்னார்  - சிலாவத்துறை பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது.

மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 111,000 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 16 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது

இலங்கைக்கு கை கொடுக்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கி!

www.pungudutivuswiss.com


பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதன் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதன் உள்நாட்டு இயக்குநர் சென் சென் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் சலுகை நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

ஏலத்தில் விற்கப்பட்ட இலங்கைப் பெண்கள் 90 பேரும் பாலியல் தொழிலுக்காகவும் பாலியல் தேவைக்கவும் கொண்டு செல்லப்பட்டது உறுதி செய் ஐநா விசாரணையில் இறங்கியது ஐ.நா!

www.pungudutivuswiss.com


ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள் இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு, இயக்கச்சியில் 700 ஏக்கர் காணிகள் சீனாவுக்கு!

www.pungudutivuswiss.com


இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக  நாளாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்திற்கு தெற்குப்புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணிகளை சீனாவிற்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாளாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது தாக்குதல்

www.pungudutivuswiss.com
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து 
சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை 

யாழ்ப்பாணத்தில் வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த குழந்தை

www.pungudutivuswiss.com
யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்தமை
தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக

12 ஏப்., 2023

வெளியான இரகசிய ஆவணம்: உக்ரைன் போரில் மேற்கத்தைய சிறப்புப் படைகள்

www.pungudutivuswiss.com
கடந்த சில தினங்களக்கு முன்னர் ஆன்லைனில் கசிந்த இரகசிய ஆவணங்களின்படி, மேற்கத்திய நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரைனில் தரையிறங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியான மனைவியை சுட்ட கணவன்!

www.pungudutivuswiss.com


குடும்ப தகறாறு முற்றி மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதில், மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி  அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகறாறு முற்றி மனைவி மீது கணவன் துப்பாக்கியால் சுட்டதில், மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் படகு சேவைக்குத் தயாராகும் காங்கேசன்துறை துறைமுகம்!

www.pungudutivuswiss.com


இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஓபிஎஸ் மேல் முறையீடு; இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை: 20, 21-ம் தேதி இறுதி விசாரணை- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

www.pungudutivuswiss.com
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் 20, 21-ம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, அதிமுக

1 இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு அனுப்புகிறது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com

இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது. 1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது

11 ஏப்., 2023

பசில் ஜனாதிபதி வேட்பாளரா?

www.pungudutivuswiss.com


சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

மரபுரிமைச் சின்னத்தை இடித்து அழித்த பவுசர்! - அள்ளிச் சென்ற தனிநபர்.

www.pungudutivuswiss.com

சாவகச்சேரி -  ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

சாவகச்சேரி - ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள்

www.pungudutivuswiss.com


2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள்  ஆலோசித்து வருகின்றனர்.

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்

மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற மனநோயாளியின் தாக்குதலில் ஒருவர் பலி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடிய ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடிய ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது உள்ளூராட்சித் தேர்தல்!

www.pungudutivuswiss.com


 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

யாழில் சிறுமிகளைச் சீரழித்த கிறிஸ்தவ போதகர் கொழும்பில் அதிரடியாக கைது

www.pungudutivuswiss.com
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் 
இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு
 உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்ட 80 வயதான போதகர் கைது 

மிருசுவிலில் குடும்பஸ்தர் கனவு கண்டு நிலத்தை தோண்டிய போது 12 விக்கிரகங்கள் மீட்பு!

www.pungudutivuswiss.com

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

www.pungudutivuswiss.com
அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி 
அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி 
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ad

ad