புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2023

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது தாக்குதல்

www.pungudutivuswiss.com
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து 
சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை 
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாரவில - ஹொரகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு கல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தான் ஓட்டிச் சென்ற பேருந்து மீது கற்களை வீசியதாக பேருந்தின் சாரதி மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கல் தாக்குதலால் பேருந்தின் முன்பக்க இடது புறம் சேதமடைந்துள்ளதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என தமக்கு தெரியாது என முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கல் வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

ad

ad