புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2023

பசில் ஜனாதிபதி வேட்பாளரா?

www.pungudutivuswiss.com


சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

“நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவக்கூடிய சிறந்த மற்றும் நிலையான திட்டத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டுமே அவ்வாறான திட்டத்தை வழங்கக்கூடிய ஒரு கட்சி என நான் நம்புகிறேன். அதற்காக நாங்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசுகிறோம்

புத்தாண்டின் பின்னர் நாம் எமது அரசியல் பிரச்சாரத்தை வலுப்படுத்துவோம். புத்தாண்டின் பின்னர் எமது ஜனாதிபதி வேட்பாளரை நாம் அறிவிப்போம்“,என அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் பண்டார, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதில் தவறில்லை என தெரிவித்தார்.

   
   

ad

ad