![]() பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித புதைகுழி அகழ்வுப்பணி அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |
-
11 செப்., 2023
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இதுவரை 17 பேரின் எச்சங்கள் மீட்பு!
10 செப்., 2023
ஆசியக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை - போட்டி ரத்து செய்யப்படுமா?
உயர்தர பெறுபேற்றில் மோசடி செய்து ஆசிரியராக கடமையாற்றியவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்
டெல்லியில் ஜி-20 மாநாடு: கூட்டுப்பிரகடனம் வெளியீடு.
மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு
மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின்
ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் வங்காளதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி
9 செப்., 2023
புங்குடுதீவில் கொடிகட்டிப்பறக்கும் கள்ளமாடு, வளர்ப்பு ஆடுகளை வெட்டுவதை தொழிலாக கொண்ட பலர் ,அரசியல்வாதிகள் ,சமூகநலவாதிகள் ,பொதுமக்கள் கண்டும் காணாதது போல வாழ்கின்ற கொடுமை
வத்திராயனில் சிக்கிய பாரிய கசிப்பு உற்பத்தி மையம்! - கட்சிப் பிரமுகர் கைது. [Saturday 2023-09-09 17:00]
![]() வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார் |
அளவெட்டியில் தீக்கிரையாகிய அரிசி ஆலை! Top News [Saturday 2023-09-09 17:00]
![]() தெல்லிப்பழை - அளவெட்டி வடக்கு பகுதியில் நேற்று அரிசி ஆலையொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. |
நடந்தாய் வாழி வழுக்கை ஆறு! - யாழ்ப்பாணத்தில் நடைபயணம்.
"நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது. |
உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்துவது கேவலம்! [Saturday 2023-09-09 17:00]
![]() தமிழ் இன படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காத எதிர்க்கட்சித் தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் |
இன்றைய அகழ்விலும் தடயப் பொருட்கள் மீட்பு!
![]() முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது |
விளைவுகளுக்கு சனல் 4 பொறுப்பேற்க வேண்டும்! - பாதுகாப்பு அமைச்சு அறிக்கை
![]() சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது |
இலுப்பைக்குளத்தில் விகாரைக்கு பெயர் பலகையை நாட்டிய பிக்குகள்! - பதற்றத்தில் திருமலை
![]() திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பெயர் பலகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது |
சர்வதேச கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவே உண்மை நல்லிணக்க ஆணைக்குழு!
![]() சர்வதேசத்தின் கண்காணிப்பிலிருந்து விலகிச் செல்வதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய சூழ்நிலையில் இப்பொறிமுறை வெற்றியளிப்பதற்கான எவ்வித சாத்தியப்பாடும் இல்லை. எனவே இவ்விடயத்தில் தாம் தவறாக வழிநடத்தப்படுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்புநாடுகள் இடமளிக்கக்கூடாது என்று சர்வதேச நெருக்கடி குழு வலியுறுத்தியுள்ளது |
8 செப்., 2023
ஷானியிடம் விசாரணையை ஒப்படையுங்கள்!
![]() தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார் |
பாதுகாப்பு நிலவர மீளாய்வு - அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான "பாதுகாப்பு நிலவர மீளாய்வு - 2030" என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் |
கடவுள் தண்டனை வழங்க ஆரம்பித்து விட்டார்! [Friday 2023-09-08 09:00] |
![]() நாங்கள் அனைவரும் டொலர்களுக்கு விருப்பமானவர்கள்தான். இங்கே ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜேவிபி என்று வேறுபாடு இல்லை நாங்கள் அனைவரும் திருடர்களே. இங்கே நாம் அனைவரும் ஒரே படகில் போகின்றவர்களே என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். |
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில், “சுகாதார துறை விடயத்தில் நான் சுகாதார அமைச்சரை நோக்கி விரல் நீட்டப் போவதில்லை. ஆட்சியாளர்களே இவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். யாராவது தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை ஜனாதிபதி செய்யவில்லை. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் மீண்டும் செல்வதென்றால் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியை கோருகின்றேன். வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்ய வேண்டாம். ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஆட்சியாளரே பொறுப்புகூற வேண்டும். இதேவேளை சனல் 4 தொடர்பில் கூறப்படுகின்றது. அதனை நான் 50 வீதமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ராஜபக்ஷக்கள் யுத்தம் செய்ததால் அவர்களுக்கு எதிராக இவ்வாறு செய்வதாகவும் இருக்கலாம். அல்லது அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சனல் 4 அவசியமில்லை. எவ்வாறாயினும் மேலே கடவுள் இருக்கின்றார். அவர் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார். அதில் ஒருவர்தான் கோட்டாபய, அவரை நாட்டை விட்டும் விரட்டினர். அதேபோன்று வீதியில் யாசகம் செய்து பணம் சேகரிப்பவர்களும் உள்ளனர்” என்றார். |