புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


எதிர்கொள்ளவேண்டிய மூன்று சவால்கள் : திருமாவளவன்  பேச்சு
’’தனி ஈழத்தை வென்றெடுப்பதற்கு முன்பாக 3 சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது. ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களர்களையும், ராணுவ முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். 
சென்னையில்  நடந்த `டெசோ' மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பேசியபோது,

2-வது சவால் தமிழர்கள் மீது ராணுவத்தினர் செய்து வரும் கொடுமைகளை நீக்கி, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தரவேண்டும். 3-வது தமிழர்கள் மீது திணிக்கப்படும் கலாசார சீரழிவுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த 3 சவால்களை வென்றெடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தனி ஈழம்தான் தீர்வு என்பதை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அதற்கான யுக்திகளையும், செயல் திட்டங்களையும் கலைஞர் வகுத்துத்தர வேண்டும். களம் காண நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈழம் வெல்லும், காலம் சொல்லும்’’ என்று தெவித்தார்.

ad

ad