புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2012


அமைச்சர் ஹக்கீம் - அதாவுல்லா ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: அக்கரைப்பற்றில் பதற்றம்
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஹக்கீம் மற்றும் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு 7 மணியளவில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையிலேயே இம்மோதல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் அதாவுல்லா சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பையின் தேர்தல் காரியாலங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அக்கரைப்பற்று வெல்ல பாதுகாப்பு வீதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தின் மீது அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் பதற்றம் நிலவியதாகவும் அமைச்சர் ஹக்கீம் அக்கரைப்பற்று சென்று கொண்டிருந்தபோது பாதுகாப்பு பிரச்சினையால் இப்தார் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தனிக்க தற்போது அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ad

ad