புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012

அதிமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் கபட நாடகத்திற்கு கண்டனம்
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமயகத்தில் இன்று மதியம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பிரதானமாக திமுக தலைவர் கருணாநிதியின் லீலைகளைப் பற்றியே விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருக்கும் போது இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு காரணமாக இருந்துவிட்டு, ஆட்சியில் இல்லாத போது இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பாதுகாப்பு என்ற போர்வையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.கவிற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிபோர் உச்சக் கட்டத்தில் இருந்தது.
அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசை வற்புறுத்த வில்லை.
மாறாக தமிழர்களை ஏமாற்றும் வகையில் காலை சிற்றுண்டி உண்ட பின், உண்ணாவிரதம் மேற்கொண்டு மதிய உணவு நேரம் வந்தவுடன் "இலங்கையில் போர் முடிந்துவிட்டது" என்ற பொய்யான தகவலைக் கூறி மூன்று மணி நேரத்தில் "சாகும் வரையிலான" தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்பினை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்து வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்தது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் மாண்டனர். அந்தத் தருணத்தில், இது குறித்து வாய் திறக்காத கருணாநிதி, தற்போது இலங்கை அரசு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார்.
இதிலிருந்து, இலங்கையில், கொத்துக் கொத்தாக தமிழர்கள் உயிரிழந்ததற்கு தன்னுடைய உண்ணாவிரதம் தான் காரணம் என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பது தெளிவாகிறது.
ஆட்சியில் இருந்தால், தன் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவதையும், ஆட்சியில் இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை செலுத்துவது போல கருணாநிதி நாடகமாடுகிறார்.
தி.மு.கவும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கூட்டம் என்ற போர்வையில் கபட நாடகம் நடத்தியதை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.


ad

ad