புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012


தமிழகத்திற்கு வந்த சிங்களர்கள் - தமிழுணர்வாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
19.09.2012 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழகத்தின் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை எதிர்த்து யுத்தம் விரும்பா புத்தன் பூமியில் ரத்தம் குடித்த
ராஜபக்சேவுக்கு வரவேற்பா,  திரும்பிப்போ!  திரும்பிப்போ! என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



 அதன் தொடர்ச்சியாக 21.09.20.12 சென்னை மத்திய தொடர் வண்டி நிலையத்தில் தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்திறங்கிய சிங்களர்களை அனுமதியோம்! அனுமதி யோம்! தமிழர்களை கொன்றொழித்த சிங்களர்களை தமிழ் பூமியில் அனுமதியோம்.

திருப்பி அனுப்பு! திருப்பி அனுப்பு! தமிழக அரசே திருப்பி அனுப்பு என்று பல்வேறு கண்டன முழக்கங்களை இன்று காலை 7.30 மணியளவில் எழுப்பினர்.








டெல்லி ஆர்ப்பாட்ட படங்கள்…






சென்னை தொடர்வண்டி நிலையத்தில் சிங்களவர்கள். ..





ad

ad