புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012

வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் நடைபெற்று வரும் 4வது டி20 உலகக் கிண்ணத் தொடரின் 5வது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இன்று மோதின.

பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேச அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய மார்டின் கப்தில் 11 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ரஸாக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் பிராங்களின் 35 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய மெக்கல்லம் 11 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் சதம் கடந்து 123 ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து 192 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக நசிர் ஹொசைன் 50 ஓட்டங்களும், அஷ்ரபுல் 21 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக கைல் மில்ஸ், டிம் சவுத்தி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் கடந்த மெக்கல்லம் ஆட்டநாயகனாக தெரிவானார்.

ad

ad