புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2012

.மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை நீதிமன்றத்தின் மேல் ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
லங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன்  ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்
மாணவர்கள் விசயேந்திரன், அக்பர் ஆகியோரே மிரட்டல் விட்டவர்களாவர்.  இவர்களின் இந்த செயலினால்  மதுரை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் அவர்கள் அதனை ஏற்கவில்லை.
தாசில்தார், பொலிஸார் உள்பட பலர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ad

ad