புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2012

16 சிக்சர் அடித்து முதலிடம்: உலக கோப்பையை வெல்வோம்- கெய்ல் நம்பிக்கை
20 ஓவர் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய அரை இறுதியில் இவர் 41 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 75 ரன் (அவுட்இல்லை) எடுத்தார். 6 சிக்சர் அடித்ததன் மூலம் இந்த உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர் என்றபெருமையை பெற்றர். 


கெய்ல் 6 ஆட்டத்தில் 16 சிக்சர்கள் அடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். வாட்சன் (ஆஸ்திரேலியா) 15 சிக்சர் அடித்து 2-வது இடத்திலும், லுகே ரைட் (இங்கிலாந்து) 13 சிக்சர் அடித்து 3-வது இடத்திலும் உள்ளனர். 

ஆட்ட நாயகன் விருது பெற்ற கிறிஸ் கெய்ல் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக கோப்பையை நாங்கள் தான் கைப்பற்றுவோம் என்று உறுதியாக சொல்கிறேன். இலங்கை அணிக்கு எனது வருத்ததை தெரிவிக்கிறேன். ஏனென்றால் இது எங்களது உலக கோப்பை என்று நினைக்கிறேன். வெஸ்ட் இண்டீசுக்குத்தான் எல்லா வகையிலும் அதிக ஆதரவு கிடைக்கும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் அணியில் அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம். 

இவ்வாறு கெய்ல் கூறினார்.

ad

ad