புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2012


இராணுவத்தளங்களை அமைக்க சீனா உதவி : த.தே.கூ.கவலை
வடபகுதியில் நிரந்தரமாக இராணுவத்தளங்களை நிறுவுவதற்கு சீனா உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளது.
 


இது தொடர்பில் தாம் கொழும்பிலுள்ள சீனத் தூதரக அதிகாரிகளை சந்தித்து வடபகுதியில் இராணுவத்திற்கு சீனா உதவுவது தொடர்பில் தமது கட்சி கவலை தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கும் அவர்களின் குடும்பத்தினர்களிற்கும் குடியிருப்புக் கட்டுமானங்களும் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் நிரந்தரப் படைக்கட்டுமானங்களும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு சீனா உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து சீனத் தூதரக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad