புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012


நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தே.ஜ.கூ. கட்சிகளின் கூட்டத்தில் முடிவு: பா. ஜனதா 
பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் போது மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் முயன்று வருவது குறித்து விவாதிப்பதற்காக இன்று (20.11.2012) காலை புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இன்று மாலை கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தின்போது இறுதி முடிவெடுக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் பல்வேறு மசோதாக்கள் குறித்து பாரதீய ஜனதா கட்சி செயல்பட வேண்டிய வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
தேசிய ஜனதாயக கூட்டணியின் விவாதத்துக்கு பிறகு எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து, குளிர்கால கூட்டத்தொடரில் எங்களது வியூகங்கள் அமையும் என்று பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

ad

ad