புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012



தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
திருமங்கலம் அருகே உள்ள நடுக்கோட்டையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் முருகன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (30). இவர்களுக்கு ரூபா (5), குணசேகரன் (1 1/2) என 2 குழந்தைகள் உள்ளனர். முருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால் மனவேதனை அடைந்த பஞ்சவர்ணம் 16-ம் தேதி மண்எண்ணையை ஊற்றி தனது உடலில் தீ வைத்து கொண்டார். 
இவரது அலறல் சத்தம் கேட்டு முருகன் காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்களது குழந்தைகளும் லேசான தீக்காயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த 17-ம் தேதி பஞ்சவர்ணம் பரிதாபமாக இறந்தார். 
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகனும் இன்று காலை இறந்தார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad