தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் பலி
இவரது அலறல் சத்தம் கேட்டு முருகன் காப்பாற்ற முயன்றார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்களது குழந்தைகளும் லேசான தீக்காயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கடந்த 17-ம் தேதி பஞ்சவர்ணம் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகனும் இன்று காலை இறந்தார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.