புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2012

தமிழகத்துக்கு சுற்றுலா சென்ற பெண் விபத்தில் பலி
தமிழகத்தின் திருவண்ணாமலை கோவிலுக்கு சுற்றுலா சென்ற இலங்கைப் பெண்ணொருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.இலங்கை கதிரேக வீதியை சேர்ந்தவர் ரோகினி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தமிழகத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி திசனம் செய்த பின்னர் கிரிவலம் சென்றுள்ளார்.
 

இதன்போது இலங்கை அகதிகள் முகாம் அருகில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ரோகினி மீது மோதியுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக சென்னை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு போகும் வழியிலே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருவண்ணாமலை பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரோகினியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad