நோர்வேயில் மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்பட்டு வருகின்றனவா என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் வலுத்துள்ளதாக நோர்வேயில் இருந்து வெளியாகியுள்ள ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.