புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2012

நோர்வேயில் மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்பட்டு வருகின்றனவா என்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு எழுந்துள்ள சந்தேகங்கள் வலுத்துள்ளதாக நோர்வேயில் இருந்து வெளியாகியுள்ள ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் காப்பக விவகாரமே ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.


சுமார் ஒரு வருட காலமாக நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரம் தொடர்பாக ஆராய்ந்துவந்துள்ள மேற்படி ஐ.நா. பேரவை, நோர்வே நாட்டில் மனித உரிமைகள் பேணப்படுவதிலும் சிறுவர்களின் உரிமைகள் பேணப்படுவதிலும் தாம் திருப்தி கொள்ளமுடியாத நிலையில் இருப்பதாக பேரவையின் உயர்குழுவில் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, மனித உரிமைகள் விடயத்தில் நோர்வே வலுவான ஆதாரம் இல்லையென்றும் அது ஊர்ஜிதப்படுத்தப்படும் வகையில் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விஷேட குழுவின் தீர்மானமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
.

ad

ad