வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாரின் உடல்நிலைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக 18 வயது பள்ளி மாணவி ஒருவர் இணையத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அந்த பகுதியையே அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Rebecca Bernardo என்ற 18 வயது பள்ளி மாணவி, அங்குள்ள கிராமம் ஒன்றில் மேல்நிலை வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடைய தாயாரின் வாத நோய்க்கு மருத்துவம் பார்க்க பணம் இல்லாத காரணத்தால், தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக இணையத்தில் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிஎனென் தொலைக்காட்சி அவரிடம் நேரில் சென்று பேட்டியெடுத்தபோது, தன்னால் தாயாருக்கு மருத்துவம் பார்க்க பணம் புரட்ட முடியவில்லை. எனது தாயாரை எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டும். எனவே என்னுடைய கன்னித்தன்மையை ஏலம் விட துணிந்துள்ளேன் என்று பரிதாபமாக கூறியுள்ளார். இது அந்த பகுதியைச் சேர்ந்தவர்களை மட்டுமில்லாது இணையவாசிகளையும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.