புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2013



இன்று --பிரியந்தி

இவள் சொற்களில் தானாக வந்து
சிக்கிகொள்கிறது தமிழ்


வானவில்லின் வர்ணகலப்பாய்
ஒளிரும் கவிதையில்
உள்ளத்தை ஊடுருவும் சொற்களை
ஒளித்துவைக்கிற ரசவாதம்.

சமுக போலித்தனங்கள்மீது கூராய்


இறங்கும் சொற்கள்
அறிவொளியை கொழுத்துகிறது------

அறிவு யுகத்தின் முதல்குரலாய்------வாருங்கள் பிரியந்தி---

யார்க்கெடுத்துரைப்போம்

நினைவடர்ந்த பாதைகளின்
யாத்திரிகர் நாம்

எம் வெற்றுக் குவளைகளில்
கசந்த நினைவுகளின் ஒரு துளி
மிச்சமிருக்கின்றது எப்போதும்
எமது ஈமப் புன்னகையைச் சுமந்த படியே
அலைகிறது காற்று

இன்றும்
தீயாலானொரு ஆடை புனைந்தே
தெருவிலிறங்கும் நிர்ப்பந்தம் எமக்கு

கடந்து செல்லும் வாயிலிருந்து
காமம் இறங்கி வருகின்றது
நூல் பிடித்திறங்கும் மயிர்கொட்டியாய்

வழிநெடுக
தெரு நாய்க் கலவியாய்
எப்போதுமொன்று பின் தொடர்கின்றது
புணர்ச்சிக் கனவில் மிதந்தபடி

ஸ்பரிசத்தின் அத்தனை இதங்களின் மீதும்
தீ வாரி இறைக்கின்றது
பிறிதொன்றின் தீண்டல்

தெறித்தறுந்த இழையின் வழி
இறுதி இசையும் கசிந்து விட
மௌனித்திருக்கிறது யாழ்

மறுபடி மறுபடி
அறைகிறது இருள்

அழக்கூடத் திராணியற்ற யாழ்
பாழ்

இப்போதெல்லாம் நாம் புன்னகைப்பதில்லை
அல்லது
புன்னகைக்கான எந்த அவசியமும் இருப்பதில்லை

பிரளயம் காவுகொள்ளும் முன்னிருந்த
காலம்மீளும் எமதவாவை
யார்க்கெடுத்துரைப்போம்

ad

ad