புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2013

டர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
 
தென்னாபிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
 
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி டர்பனில் இன்று நடைபெற்றது.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்களை எடுத்தது,
 
பின்னர் 281 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 35.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
 

ad

ad