குஜராத் கலவரம்! நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி! அஹமதாபாத் நீதிமன்றம் உத்தரவு!
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது குல்பார்க் சொசைட்டியில் 69 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட
69 பேரில் ஜாகியா ஜாப்ரியின் என்பவரின் கணவர் எசான் ஜாப்ரியும் ஒருவர். குல்பர்க் சொசைட்டி படுகொலையில் முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உள்ளது என ஜாகியா ஜாப்ரி புகார் தெரிவித்தார்.இதையடுத்து நரேந்திர மோடிக்கு எதிரான புகார் பற்றி விசாரிக்க 2008ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. நரேந்திர மோடிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்தது.
இந்த மனுவை விசாரித்த அஹமதாபாத் மாஜிஸ்திரேட் கோர்ட், ஜாகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அஹமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு அதிருப்தி அளிப்பதாக ஜாகியா ஜாப்ரி தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.
அஹமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவு அதிருப்தி அளிப்பதாக ஜாகியா ஜாப்ரி தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்.
கொல்லப்பட்ட எசான்ஜாப்ரி காங்கிரஸ் கட்சியில் எம்.பி.,யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.