புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2013

மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் முரளிதரன் சாதகமான பதில்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைப்பது என ஜனாதிபதி முடிவு செய்திருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது குறித்து முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முரளிதரன் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிட சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் இது தொடர்பில் தொடர்ந்தும் முரளிதரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுவதுடன் அவர் தற்பொழுது வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முத்தையா முரளிதரன் அண்மைய காலமாக அரசாங்கத்திற்கு ஆதவான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இலங்கையில் போரில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என முரளிதரன் சனல் 4 தொலைக்காட்சியிடம் தெரிவித்திருந்தார்.
யுத்தம் என்பது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் மோதலாகும். யுத்தத்தின் போது எதுவும் இடம்பெறலாம். ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமலே இலங்கைக்கு எதிராக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருக்கவில்லை. அதுமட்டுமல்ல இலங்கைக்கு கூட இதற்கு முன்னர் வரவில்லை.
யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதமரியிடம் அழுது புலம்பியதால் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.
பிரிட்டிஷ் பிரதமர் தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம்.
கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். பிரிட்டிஷ் பிரதமர் தவறான விசாரணைகளை நடத்தி இல்லாத குற்றச்சாட்டுகளை இலங்கை மீது சுமத்துவதற்கு முயற்சித்து வருகிறார்.
நான் அப்படியான கொள்கைகளை என்றுமே கடைப்பிடிப்பதில்லை. எனக்கும் என்னுடைய கடந்த காலம் ஞாபகம் இருக்கிறது.
நானும் ஒரு தமிழன். 1983ம் ஆண்டின் இனக்கலவரத்தின் போது எனது குடும்பமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.
எங்களிடம் இருந்த அனைத்துமே அழிந்து போயின. அப்படியான துன்பங்களை அனுபவித்தாலும் நான் எனது கடந்த காலத்தை பற்றி நினைத்து துன்பப்படுவதே இல்லை.
கடந்தகாலத்தைப் பற்றி மறந்து கடந்தகால துன்பங்களை இழைத்தவர்களுக்கு மன்னிப்பளித்து நாம் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதே எனது நோக்கமாகும்.
இது பற்றி இயேசுநாதரும் ஒரு தடவை கூறியிருக்கிறார் என முத்தையா முரளிதரன் சனல் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad