பிரித் ஓதி முஸ்லிம் வியாபாரியை மன்னிப்பு கோரச் செய்த தேரர்கள்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் புத்தரின் உருவ சித்திரம் கொண்ட கையுறைகளை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக ஆத்திரம் கொண்ட பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்கள் முஸ்லிம் கடையில் பிரித் ஓதி வியாபாரியை பொதுமன்னிப்பு கோரச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் பெண்கள் அணியும் நீண்ட கையுறைகளில் புத்தரின் உருவ சித்திரம் இருந்துள்ளது. இந்த கையுறையை அணிந்தால் கைகளில் பச்சை குத்தியது போல் தெரியும்.
இது தொடர்பாக அறிந்து கொண்ட பௌத்த மதகுருக்கள் உட்பட சிலர் அண்மையில் இந்த கடைக்குச் சென்று ஏற்படுத்திய பிரச்சினையை அடுத்து அந்த கடையை சில தினங்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.