புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


அமெரிக்கா அதிரடி : நரேந்திர மோடியை சந்திக்கிறார் நான்சி பவல்

குஜராத்தில் இனக்கலவரத்தை முதல்–மந்திரி நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார் என்று அமெரிக்கா கருதியது. மேலும், மோடிக்கு ராஜ்ய ரீதியிலான விசாவை அமெரிக்கா கடந்த 2005–ம் ஆண்டு ரத்து செய்தது. மோடிக்கு மீண்டும் விசா வழங்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா நேரடியாக பதில்
அளிக்காமல் தவிர்த்து வந்தது. தவிரவும், தொடர்ந்து மோடியை அமெரிக்கா புறக்கணித்து வந்தது.


மோடி எதிர்ப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்ய மறுத்தும் வந்தது. இந்த நிலையில் ஏப்ரல்–மே மாதங்களில் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது பொதுக்கூட்டங்களில் மக்கள் திரளாகக் கூடுகின்றனர். பல்வேறு கருத்துக்கணிப்புகளும் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆவார் என கூறி வருகின்றன.
இந்த நிலையில் காட்சிகள் மாறத்தொடங்கி உள்ளன. குஜராத் இனக்கலவரங்களுக்காக மோடியைப் புறக்கணித்த மேற்கத்திய நாடுகளின் பார்வை மாறியது. அவை மோடியுடனான உறவை புறக்கணித்து வந்த நிலையை மாற்றின. அவற்றின் தூதர்கள் மோடியை சந்தித்து பேசினர். 10 ஆண்டு காலம் மோடியைப் புறக்கணித்த இங்கிலாந்தும் தனது நிலையை மாற்றியது. இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பவன், நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இப்படி மோடியின் பக்கம் காற்று பலமாக வீசுவதை அறிந்து, அமெரிக்காவும் தன் நிலைப்பாட்டை அதிரடியாக மாற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் நடைபெற வேண்டுமானால், மோடியுடன் இணக்கமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டு விட்டது. இதனால் மோடிக்கு எதிரான தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு அமெரிக்கா ஆளாகி உள்ளது.
அந்த வகையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவல், மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது வரவுள்ள பாராளுமன்றத் தேர்தல், இந்தியாவுக்கான மோடியின் எதிர்காலத் திட்டங்கள், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்து மோடியிடம் நான்சி பவல் விரிவாகப் பேசுவார்.
இந்தச் சந்திப்புக்கு நான்சி பவல் முறைப்படி மோடியிடம் விண்ணப்பித்தார். அவரது வேண்டுகோளை மோடி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து இன்று இந்த சந்திப்பு நடக்கிறது.

ad

ad