புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014

யோசெவ் முகாமை பாதர் ஒருவரா நடத்துகின்றார்; ஆணையாளர் மனோ கேள்வி 
news
யோசெவ் முகாம் என்று நீங்கள் கூறுவது எதனை அதனை பாதிரியார் ஒருவரா நடாத்துகின்றார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் மனோ இராமநாதன் சாட்சியமளிக்க வந்த தாயாரிடம் கேள்வி எழுப்பியிருந்தமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகன் காணாமல் போனமை தொடர்பில் சாட்சியமளிக்க வந்திருந்த தாயார் எனது மகனை நாங்கள் யோசெவ் முகாமில் தேடினோம். அவர் அங்கு இல்லை. அதனையடுத்து வேறு இடங்களிலும் தேடினோம். ஆனால் மகன் எங்கும் இல்லை என சாட்சியமளிக்கும் போது குறுக்கிட்ட ஆணையாளர் மனோ இராமநாதன்,

நீங்கள் யோசெவ் முகாம் என்று எதனை கூறுகிறீர்கள்? இந்த முகாமை பாதர் ஒருவரா நடாத்தி வருகின்றார் என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார். இந்த விடயம் அங்கிருந்த அனைவருக்கும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை சுவீகரித்து பாரிய இராணுவ முகாமை அரசு அமைத்துக் கொண்டுள்ள நிலையில் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக ஒரு ஆணையார் கேள்வி எழுப்புவது என்பது கோலிக்குரிய விடயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ad

ad