இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடமாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுணத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தோப்பாவெவ விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.