ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்த போக்குவரத்து பணிப்பாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தடை உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே , குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு எழுத்துமூல உத்தரவொன்றையும் பிறப்பித்துள்ளார்.
வாகனங்கள் காணாமற்போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறித்த போக்குவரத்து பணிப்பாளரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தியிருந்தது.
இந்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.