புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2015

கோத்தபாய இதற்காகவா 39000 மில்லியன் பெற சூழ்ச்சி செய்தார்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை கடற்படைக்கு கிடைத்த யூ.எஸ் டொலர் 300 மில்லியனை (இலங்கை நாணயப்படி 39000 மில்லியன்) தனியார் அவன்கிரேட் பாதுகாப்பு சேவை(Avant Grade Security Services Limited PVT LTD)(தனியார் நிறுவனம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு மாற்றினார் என தெரியவருகிறது.
இது பற்றி தெரியவருவதாவது, இலங்கை கடற்படை மாத்திரம் வெளிநாட்டு கப்பல்களுக்கு தென்பகுதியில் பாதுகாப்பு கொடுத்து இந்த பெரும் தொகை பணத்தை வருமானமாக பெற்றுவந்தது.
எனினும் எட்மிரல் சோமதிலக்க தியாநாயக்கா கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின் இந்த தனியார் பாதுகாப்பு கம்பனி ஆரம்பிக்கப்பட்டு இந்த வருமானம் தனியார் கம்பனிக்கு கிடைக்கப்பெற்ற வருமானத்தை இவர்களுக்க கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தனியார் கம்பனியின் மூலம், ஆதாயம் கோத்தபாயவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது பாதுகாப்பு போக்குவரத்து போன்றவை பொறுப்பேற்கப்பட்டு கடற்படைக்கு கிடைத்த வருமானத்தை இந்த தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பெரும் தொகையும் கடற்படைக்கு ஒரு சிறு தொகையுமே வழங்கப்பட்டு வந்ததாக ஆங்கில இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ad

ad