சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து
கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயலலிதாவுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அமைச்சர்களுடன் சென்ற முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.