14 வயதான மகளை காமுகர்களுடன் பணத்திற்காக அனுப்பியதாக கூறப்படும் தாய் ஒருவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் தரங்கா மாவத்தகே உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை காவற்துறை பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி மல்கா துஷாரி பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு சென்று மாணவிகளுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட 14 வயதான சிறுமி கருத்தரங்கின் பின்னர் காவற்துறை நிலையத்திற்கு சென்று தான் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்தே சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சிறுமியின் தாய் கடந்த ஒரு வருடமாக தனது மகளை பணத்திற்காக இவ்வாறு காமுகர்களிடம் அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்ய காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.