
வடமராட்சியினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை கண்டு அச்சமுற்றுள்ள கூட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சுமந்திரனுடன் மேலும் இருவரை அங்கு களமிறக்கியுள்ளது. அவ்வகையில் வாக்குகளை இலக்கு வைத்து முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை
தலைவர் அனந்தராஜ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சார்பில் மாதங்கி நெல்சன் எனும் இருவரை களமிறக்கவுள்ளனர். எனினும் ஒருபுறம் சாதிய பாகுபாட்டை மக்களிடையே தூண்டிவிடுவதுடன் இன்னொருபுறம் அதனை வைத்து அரசியல் செய்வதாக வடமராட்சி மக்கள் சீற்றங்கொண்டுள்ளனர்.