ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
டெல்லி கொண்டிலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் மனோஜ் குமார். இவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் மீது நில அபகரிப்பு குற்றத்திற்காக டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். எம்.எல்.ஏ. மனோஜ் குமார் கைது செய்யப்பட்டதால் ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.