புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2015

நாட்டில் பெய்து வரும் கடும் மழை மட்டக்களப்பு- பொலன்னறுவை பாதை வெள்ளம் போக்குவரத்தும் துண்டிப்பு


மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக இன்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பொலன்னறுவை- மட்டக்களப்பு எல்லைக்கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு பாதையின் நாமல்கம மற்றும் பிள்ளையாரடி பகுதிகளில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது.
இதன் காரணமாக வெலிக்கந்தை வரையான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே வெலிக்கந்த பகுதியில் உள்ள சியம்பலாகஸ்வெவ குளம் நிரம்பி வழிவதாலும், குடாஓய, மாதுரு ஓயா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் எதிர்வரும் நாட்களில் நிலைமை இதனை விட மோசமடையலாம் என்று அஞ்சப்படுகின்றது.

ad

ad