இன்று (07) காலை ஆரம்பமான இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல்களிலும் பார்க்க இத்தேர்தலில் வாக்களிப்பு, பன்மடங்காக அதிகரித்துள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஆகக்கூடிய வாக்களிப்பு வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு கடமையில்
தேர்தல் முடிவுகளை, நாளை (08) மு.ப. 10.00 மணியளவில், மஹரகம தேசிய இளைஞர் மத்தியநிலையத்தில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதிலுமுள்ள 334 பிரதேசங்களில் இத்தேர்தல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
.
.