புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு மனு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் எஸ். லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினமும் மரபணு சோதனை அறிக்கை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை சம்பந்தப்பட்ட ஒன்பது சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad