புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

ஜெ. கோரிக்கை உடனடி ஏற்பு: ரூ.939.63 கோடி நிதி ஒதுக்கினார் பிரதமர் மோடி

முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்கு ரூ. 939.63 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி
ஒதுக்கியதோடு, வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின் கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய  மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கடும் மழையின் காரணமாக பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஜெயலலிதா 500 கோடி ரூபாய் ஒதுக்கி ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளச் சேத நிவாரணம் மற்றும் சீரமைப்புகளுக்கான தேவை முதற்கட்டமாக 8,481 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகை மாநில அரசுக்கு வழங்கப்படவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமரை இன்று கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக உடனடியாக 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும், பிரதமரை, முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். முதலமைச்சரின் கடிதமும், வெள்ளச் சேத அறிக்கையும் பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை அளிக்கப்பட்டது.

முதலமைச்சரின் கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசு உடனடி நிதி உதவியாக 939.63 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வெள்ளச் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து கூடுதல் நிதியுதவியை பரிந்துரைக்க விரைவில் மத்திய ஆய்வுக் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்புவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

ad

ad