புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒபாமா

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் சில பகுதிகளும், ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும், உலகின் பல பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை கொன்று வருகின்றனர்.
கடந்த 13–ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.  இதனால் ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.
9 நாள் பயணமாக துருக்கி மற்றும் ஆசியா நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பி செல்வதற்கு முன்பாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பேசிய ஓபாமா, உலகம் முழுவதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் செய்துவரும் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
அதேபோல் சமீபத்தில் ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தகர்த்த தீவிரவாதிகளை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தேடிபிடித்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ad

ad